0

ஈரம்


காதல் நிரப்பிய,
மனதை கேட்டேன்!

எந்தன் கண்களுக்கு,
ஈரத்தை தந்துவிட்டு...
உந்தன் கண்களிலிருந்த,
காதலை எல்லாம்,
வேறொருவனுக்கு தந்துவிட்டாய்!
0

கண்ணாடி குமிழ்


கண்ணாடி குமிழாய்,
கொடுக்கப்பட்ட மனதை,
ஆயிரம் துண்டுகளாய்,
உடைத்த பின்பு...
நீ நடக்கும் பாதையில்,
உன்னை வருத்தாது,
ஒவ்வொரு துண்டும்,
உதிர்ந்த மலராய்,
மாறுவதும் ஏனோ?

முதல் காதல்!


கரை அறியா கனவுகளும்,
உன்னை எண்ணியே மலர்ந்தன!
கனவுகளில் வாழ்தலும்,
உன்னுடனே நடந்தன!
ஆயிரம் ஆசைகளும்,
ஆயிரம் முத்தங்களும்,
உனக்காகவே பிறந்தன!

என்னுடைய...
முதல் காதலின்,
உன்னுடைய மறுப்பால்,
இவை யாவும்,
வேறோடு மடிந்தன...
2

காற்றோடு...


என்னை பார்க்கவே வந்துவிடும்,
உன்னுடைய வாரக் கடிதத்தையும்...
என்னுடைய நலமறிய அனுப்பப்படும்,
உன்னுடைய அலைபேசி குரலையும்...
எதிர்பார்த்து காத்திருந்த,
ஒவ்வொரு அழகான நொடியும்...
கல்லூரி விடுதியின் அறையில்,
காற்றோடு இன்றும் கலந்திருக்கிறது...
அன்பின் நினைவலைகளாய்!

எத்தனை எத்தனை கோலங்கள்...


தாயின் கருவில் உயிராகவும்,
அழுது பிறந்த பிள்ளையாகவும்,
தத்தித் தவழும் மழலையாகவும்,
உடன் பிறப்பிற்கு சகோதரியாகவும்,
நட்பிற்கு உற்றத் தோழியாகவும்,
இல்லறம் புகும் மனைவியாகவும்,
மணவாளனை ஈன்றவளுக்கு மகளாகவும்,
பிள்ளைபேறு பெற்று தாயாகவும்,
எத்தனை... எத்தனை... கோலங்கள் காண்கிறாய்,
பெண்ணே!

கதைகள் கவிதைகளாய்!


கல்லூரி விடுதியில்,
என்னுடைய அறையில்,
நெடுநாட்களாக...
என்னை சுமந்த நாற்காலிகளும்,
சாய்ந்து நின்ற கதவுகளும்,
எந்தன் உறக்கம் காணாத தலையணையும்,
ஆயிரம் ஆயிரம் கதைகளாய்...
உந்தன் பிரிவின் வலியையும்,
உந்தன் அன்பின் இழப்பையும்,
கவிதையாய் சொல்லும்!
2

பிரிவின் வலி...


கல்லூரி விடுதியின்,
தாழிட்ட அறையில்...
பாலையில் எறியும்,
மனித உயிரின்,
பெருத்த வலியோடு,
ஒவ்வொரு நாளும்,
விடைபெறும் என்று...
உன்னை பிரியும்,
அன்றைய பொழுதில்,
நான் அறிந்திருக்கவில்லை!

அன்பைத் தேடி...


கல்லூரி விடுதியின்,
உணவுப் பட்டியலில்,
தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை...
உணவோடு பகிரப்படும்,
அம்மாவின் அன்பும் அக்கறையும்!
2

பெற்ற பலன்


பிறக்கும் குழந்தையின்,
உடலுக்கு உயிரையும்,
மனதிற்கு அன்பையும்,
நிரப்பித் தருகிறாய்!

சிறிது காலம்,
பிள்ளைக்கு உணவாக,
குருதியையும் தருகிறாய்!

நிரப்பித் தந்த,
அன்பை எல்லாம்,
உயிர்களிடம் வெளிப்படுத்தும்,
பண்பையும் தருகிறாய்!

ஒவ்வொரு நிலையிலும்,
ஒவ்வொரு செயலுக்கும்,
ஊன்றுகோலாய் இருந்து,
வாழ்க்கையில் வெற்றியையும்,
தேடித் தருகிறாய்!

பலன் ஏதும் வேண்டாது,
நீ செய்த செயல்களுக்கு,
நான்...
என்ன செய்ய போகிறேன்?
3

அறை எண் 9


வாடை காற்றால்,
அசையும் மரங்கள் கொண்ட,
கல்லூரி விடுதியில்,
சன்னலின் ஓரம்,
தனியாய் அமர்ந்து,
இரசிப்பதும்...
வருந்துவதும்...
ஏங்குவதும்...
உந்தன் அன்பை எண்ணியே!