வெள்ளி மேகத்திற்கு
பொட்டு வைத்தேன்
கருஞ் சூரியன்
என்றே சொன்னேன்
திரையிட்டு
மறைத்து வைத்தேன்
என்னவள்
உறங்கிப் போனாள்...
திரையிட்டது
அவள் விழிகளுக்கு
கருஞ் சூரியன்
உறங்குவதற்கு!
புல் நுனியில்...
விடியலின் நீர் துளி
பச்சை புல் நுனியில்
முத்தமிட்டு காதோடு
கவி பாடும் காலை...
உன் குழி விழுந்த
கைகளில் முத்தமிட
காற்றோடு உனக்கு
கடிதம் வரைந்தது.
நீயும் குவிந்த கைகளில்
நீர் துளியை தானம்
பெற்றாய்.
நானும் உன்
மனதை வெல்ல
யாரிடம் கவி பாடுவேன்.
பச்சை புல் நுனியில்
முத்தமிட்டு காதோடு
கவி பாடும் காலை...
உன் குழி விழுந்த
கைகளில் முத்தமிட
காற்றோடு உனக்கு
கடிதம் வரைந்தது.
நீயும் குவிந்த கைகளில்
நீர் துளியை தானம்
பெற்றாய்.
நானும் உன்
மனதை வெல்ல
யாரிடம் கவி பாடுவேன்.
நீ நுழைந்தாய்
சுடும் சூரியனைக்
கடன் வாங்கி
ஓடையினும் குளிர்மையாய்
மனதின் பனிமழையாய்
வெண்மையை படரவிடும்
நிலவினும் மென்மையாய்
என் மனதில் நீ நுழைந்தாய்
கடன் வாங்கி
ஓடையினும் குளிர்மையாய்
மனதின் பனிமழையாய்
வெண்மையை படரவிடும்
நிலவினும் மென்மையாய்
என் மனதில் நீ நுழைந்தாய்
கருங்காட்டு நிலவு
உனைக் கண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
என் விழியிரண்டும்
தேய்கிறது
கருங்காட்டு நிலவைப்போல்...
கொஞ்சம் கொஞ்சமாய்
என் விழியிரண்டும்
தேய்கிறது
கருங்காட்டு நிலவைப்போல்...
தாய்
உனக்கு உவமைகள்
தேவையில்லை
நீயே உவமையாகிறாய்!
அன்பெனும் மழையும்
நிலவாய் அரவணைப்பும்
குளிரோடையென எனைச்
சுற்றி உந்தன் நினைவுகளும்...
போதும் போதும்!
வரிகள் சிக்கவில்லை
வார்த்தை தேடல்கள்
நிற்கவில்லை...
எதைக் கொண்டு நான்
உந்தன் பெருமை கூற...
தாயே பிறவியால்
நான் உனக்கு சேய் தான்
ஆனால்
நான் பொழியும் அன்பால்
நீயும் எனக்கு சேய் தான்
தேவையில்லை
நீயே உவமையாகிறாய்!
அன்பெனும் மழையும்
நிலவாய் அரவணைப்பும்
குளிரோடையென எனைச்
சுற்றி உந்தன் நினைவுகளும்...
போதும் போதும்!
வரிகள் சிக்கவில்லை
வார்த்தை தேடல்கள்
நிற்கவில்லை...
எதைக் கொண்டு நான்
உந்தன் பெருமை கூற...
தாயே பிறவியால்
நான் உனக்கு சேய் தான்
ஆனால்
நான் பொழியும் அன்பால்
நீயும் எனக்கு சேய் தான்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)