0

கருஞ் சூரியன்

வெள்ளி மேகத்திற்கு
பொட்டு வைத்தேன்
கருஞ் சூரியன்
என்றே சொன்னேன்
திரையிட்டு
மறைத்து வைத்தேன்
என்னவள்
உறங்கிப் போனாள்...

திரையிட்டது
அவள் விழிகளுக்கு
கருஞ் சூரியன்
உறங்குவதற்கு!

பிரம்மன்

பிரம்மனுக்கு நன்றி
நவில்வேன் உனைபடைத்ததற்கு
இருப்பினும்
அவன் மீது கோபம்
எனக்கு
காலமெனும் காலனை
காரணமின்றி
கரு விதைத்ததற்கு
2

சிறை

உன் வார்த்தை
சங்கீதக் கீற்றுகள்
தெரிக்கும் புதுக்கவிதை
விணையின் நாதமும்
உன் வார்த்தைக்கு
செவி மடுக்கும்
காரணம் கேட்டால்
எனை அக்கனமே
சிறையெடுக்கும்
0

காதலன்

உன் விரல்கள்
விளையாடும்
புது யுகக் காதலன்
சங்கீதம் உட்கொண்ட
பாடகன்
உனைப் புகழ் பாடும்
கவி எனக்கு
சிரம் தாழ்த்தும்
என் நண்பன்யாழெனும்
இசைஞன்
0

புல் நுனியில்...

விடியலின் நீர் துளி
பச்சை புல் நுனியில்
முத்தமிட்டு காதோடு
கவி பாடும் காலை...

உன் குழி விழுந்த
கைகளில் முத்தமிட
காற்றோடு உனக்கு
கடிதம் வரைந்தது.

நீயும் குவிந்த கைகளில்
நீர் துளியை தானம்
பெற்றாய்.

நானும் உன்
மனதை வெல்ல
யாரிடம் கவி பாடுவேன்.
0

நீ நுழைந்தாய்

சுடும் சூரியனைக்
கடன் வாங்கி
ஓடையினும் குளிர்மையாய்
மனதின் பனிமழையாய்
வெண்மையை படரவிடும்
நிலவினும் மென்மையாய்
என் மனதில் நீ நுழைந்தாய்
0

உன்னை எண்ணி

இருளை நோக்கி
மாலை நேரம்
செல்ல செல்ல
உன் நினைவுகள் என்
நெஞ்சில் வளர்பிறை தான்

கருங்காட்டு நிலவு

உனைக் கண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
என் விழியிரண்டும்
தேய்கிறது
கருங்காட்டு நிலவைப்போல்...
6

தாய்

உனக்கு உவமைகள்
தேவையில்லை
நீயே உவமையாகிறாய்!
அன்பெனும் மழையும்
நிலவாய் அரவணைப்பும்
குளிரோடையென எனைச்
சுற்றி உந்தன் நினைவுகளும்...

போதும் போதும்!
வரிகள் சிக்கவில்லை
வார்த்தை தேடல்கள்
நிற்கவில்லை...

எதைக் கொண்டு நான்
உந்தன் பெருமை கூற...

தாயே பிறவியால்
நான் உனக்கு சேய் தான்
ஆனால்
நான் பொழியும் அன்பால்
நீயும் எனக்கு சேய் தான்
0

வருத்தம்

உன் விழியோடு வழியும்
சிறு தூரலும் சில நிமிடம்
என்னைச் சிதறடிக்கும்.

என் செவியை சிறையெடுக்கும்
உன் சிறு அழுகையும்.

அன்பே உன் மனதோடு
எண்ணத்தை கடனாய்
கொடுப்பாயா
உன் வருத்தம் என்னோடு
போகட்டும்
ஏனெனில் என் விழியின்
உனது கண்ணீருக்கு
எனது விரல்கள் பதிலளிக்கும்!