~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
பிழை நீங்கி,
பிறந்திருந்தால்…
பிறர் தயை நாடாது,
பிழைத்திருப்பேன்…
என்ற…
பிதற்றல்கள் யாவும்…
பொய்மையே!
காதுகள் அறியும்,
மொழியன்றி...
கண்களும் அறியும்,
மொழியதனில்...
கைகளே கவிபாடும்,
கவித்துவத்தை...
கதைப்போமா...
இன்னல்களின் இனிமையும் நீ,
இன்பத்தில் இழிப்பதுவும் நீ,
இமைகளின் இயற்றலும் நீ,
இமைகள் இழப்பதுவும் நீ,
இவன் இதுவென இயம்புவதும் நீயே...
கவிதையாய் கரையும் கண்ணீரே!