சிறுபிள்ளையாய் செய்வாயா?


இறைவா...
தாயின்...
அன்பான முத்தமும்,
ஆராரிரோ தாலாட்டும்,
அழகிய கொஞ்சலும்,
பாசமிகு அரவணைப்பும்,
அவள் மடி உறக்கமும்,
மீண்டும் பெற...
சிறுபிள்ளையாய் செய்வாயா?
0

இறைவா...


அன்பாலே உலகம் செய்து,
அழகான உறவுகளும் செய்தாய்!
உயிர்களை பிறக்கச் செய்து,
அதனை உடலுக்குள் புகவும் செய்து,
இறப்பையும் அறிய செய்தாய்!

மலருக்கு வாடை தந்து,
மலரும் வினை செய்தாய்!
சரிகம இசை தந்து,
அதனை காற்றினில் ஒலியாகச் செய்தாய்!
ஒலியை உணரச் செய்து,
மொழியை பிறக்கவும் செய்தாய்!

சூரிய குடும்பம் படைத்து,
அதனுடன் நிலவும் படைத்து,
ஒளியை எங்கும் படரச் செய்தாய்!
இரவு பகல் மாறுதலின்...
பாகுபாட்டையும் உணரச் செய்தாய்!

இறைவா...
இவை அனைத்தையும் செய்யச் சொல்லி,
உன்னை செய்து அனுப்பியவன் யாரைய்யா?
5

இயற்கைச் சீற்றங்கள்


உன் பார்வை பட்டு,
பூக்கள் எல்லாம் உதிரும்...
உன் இடை வளைவுகளில்,
செடி கொடிகள் படரும்...
வானத்திலிருந்து கிளம்பிய,
மழைத் துளிகளும்,
மண்ணைச் சேராமல்,
உன்னையே சுற்றி வட்டமிடும்...
சின்னச் சின்ன நட்சத்திரங்களும்,
அழகிய வெள்ளை நிலவும்,
விண் திரைக்குள் மறையும்...
உன்னுடைய மேனிக் குளிர்வை,
சற்றும் தாங்க இயலாமல்,
சூரியனும் போர்வைகுள் நுழையும்...
இந்த இயற்கைச் சீற்றங்கள்,
உன்னால் மட்டுமே நிகழும்!

ஆகையால் பெண்ணே,
வெளியில் எங்கும் அலையாமல்,
என்னுடைய மனதிற்குள்,
நிலையாய் தங்கிவிடு...
அந்த சீற்றங்களை எல்லாம்,
என்னுடைய மனது மட்டுமே,
சுகமாய் தாங்கிக் கொள்ளும்!

இன்னிசை விருதுகள்...


உன் விழி இமையில்,
படர்ந்துள்ள கருந்தோகைகள்,
என் உதடு பட்டு,
இசைக்கீற்றுகளை விரிப்பது...
நம் காதுகளுக்கு மட்டும்,
எப்பொழுதும் கேட்கிறது...
அந்த இசைக்கு வேறேதும்,
இணையில்லை என,
இயற்கையின் இன்னிசை விருதுகள்,
பல காத்துக்கிடக்கின்றன!

முத்தமாய் பனி மழை!


நெற்றி முட்டி,
கன்னங்கள் தேய்த்து,
ஒரு துளி முத்தமும்...
சிறு பார்வையோடும்,
அழகிய புன்னகையோடும்,
ஒரு சின்ன வெட்கமும்...
கைகளை பிடித்து,
நெற்றிப்பொட்டில் வைத்து,
சில அன்பான வார்த்தைகளும்...
நான் கேட்கும் பொழுது,
புன்னகையோடு வெட்கத்தையும்,
அன்பான வார்த்தைகளையும்,
உடனே தந்துவிட்டு...
முத்தத்தை மட்டும்,
கடன் வைக்கிறாய்...

கடனை எல்லாம்,
கொஞ்சம் கொஞ்சமாய்,
அவ்வப்பொழுது தந்துவிடு,
முத்தத்தின் பனி மழையில்,
மொத்தமாய் நனைந்து,
என்னையும் நனைத்துவிடாதே!

மழை நின்றும் நனைகிறாய்!


மழை நின்ற போது,
என் சட்டைக்குள்,
முகம் புதைத்து...
என் நெஞ்சில்,
உன்னுடைய நினைவுகளின்,
அன்புத் தூரல்களில்,
அழகாய் நனைகிறாய்!

அடி பெண்ணே,
இது என்ன விளையாட்டு?
3

பூக்களுக்கு பிறந்தநாள்!


உன் உதடுபட்டு,
விரியும் பூக்கள் எல்லாம்,
இயற்கையாய் மலரவில்லை...
வெட்கம் தாங்காமல் வெடிக்கின்றது!

என் உதடுகளும்,
நாணல் கொண்டு,
அழகாய் வெடிக்க,
காத்துக் கிடக்கின்றது!
4

விழிச்சிறையில்...


கவிஞர்களின் கவிதையிலும்,
ஓவியனின் தூரிகையிலும்,
சிற்பியின் உளியிலும்,
அடங்க மறுக்கும்...
அமைதி என்னும்,
அணிகலன் கொண்ட,
அழகிய பெண்ணே!
என் கண்களுக்குள் மட்டும்,
எவ்வாறு சிறைபட்டு இருக்கிறாய்?
0

யாரும் அரியாத உண்மை...


நட்சத்திரங்கள் ஒன்று கூடி,
விரிக்கும் வெள்ளைக் கீற்றுகளின்,
அழகிய கூட்டத்தில் இருந்து,
வருபவள் தேவதை என்றால்...
உன் பெயர் என்ன?

வண்ணங்கள் பல பெற்று,
வரையப்பட்ட பெண் ஓவியத்தில்,
இருப்பவள் அழகி என்கிறார்கள்...
அப்படியெனில் நீ யார்?

பெண்ணே, நீ...
தேவதைகளின் தேவதை என்பதும்,
அழகிகளின் அரசி என்பதும்,
யாரும் அரியாத உண்மையடி!
0

வெள்ளை நிறக் காதல்கள்!


பெண்ணே,
நீ எந்தன் வானம்!
உன்னுடைய விழிகள்,
அதிகாலை சூரியன்கள்!

ஆகையால்...
மேல் இமையும், கீழ் இமையும்,
சேரும் ஒவ்வொரு கனமும்...
எனக்கு ஆயிரம் இரவுகள்!

அந்த இரவுகளின் நிலவாய்,
உன் முகம் பொழிவதெலாம்...
அமைதியை பெருக்கும்,
அன்புகள் நிறைந்த,
வெள்ளை நிறக் காதல்கள்!
3

சன்னலோரம் ஒரு பார்வை...


வகுப்பறை வாசலில்,
என்னை பார்த்து,
விடை பெறுவதற்கு,
கை அசைத்துவிட்டு...
பிரிய மனமின்றி,
சன்னலின் ஓரம்,
எட்டிப் பார்த்து,
வருத்தத்துடன் நீ சென்றதும்...
உன்னுடயை பிரிவால்,
பள்ளியின் முதல் நாளில்,
நான் அழுத அழுகையும்...
அழகிய கவிதைகள்!
3

அழகான பொய்கள்!


பூமி தொட விழையும் மழையின்,
நீர்த் துளிகள் என்னை தொடாமல்,
சேலைக் குடைகுள் என்னை மறைத்தாய்!

வெடிக்கும் இடி முழக்கம்,
என் காதுகளில் எட்டாமல்,
மார்போடு இருக்க அணைத்தாய்!

புன்னகையால் படம் எடுக்கும் மின்னலுக்கு,
முகம் காட்ட வேண்டாம் என்று,
என் கண்களையும் கைகளால் மூடினாய்!

இதனால்...
என்னை தூரலாய் தொட வந்த மழையும்,
எனக்காக இசை மீட்டி தந்த இடியும்,
என்னை படம் பிடிக்க வந்த மின்னலும்,
உன்னை பார்த்து பொறாமை பட்டதாய்...
ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழகாக,
என்னிடம் எதற்காக பொய் சொல்கிறாய்?
3

தூரல் மழை...


வீட்டின் முற்றத்தில் நின்று...
பெய்யும் மழையின் சாரலை,
கைகளின் குவியத்தில் ஏந்தி,
குளிர்ச்சியை இரசித்திருந்த பொழுது...
மழையின் தூரல் துளியை,
என் முகத்தில் தெளித்து...
நீயும் என்னை போன்றே,
சின்னக் குழந்தையாய் மாறி,
என்னுடன் விளையாடி தருணத்தை,
இமை அளவும் மறக்கவில்லை!
2

அழகிய பொழிவுகள்!


எத்தனை எத்தனையோ மலர்கள் பறித்து,
அதில் ஒன்றை தேர்வு செய்து,
அதனை அழகாய் சூட வைத்து,
எனக்காகவே பூத்ததாய் பொய் சொல்வாய்!

தத்தித் தவழ்ந்து திரியும் போது,
என்னை அறியாமல் கதவில் முட்டினால்,
பிழை செய்ததாய் கதவை அடித்துவிட்டு,
எனக்கு சமாதானங்கள் பல சொல்லி,
கண்ணீர் துடைத்து அழுகையை நிறுத்துவாய்!

கைகளின் தொட்டிலில் என்னை ஏந்தி,
நெற்றி மீது நெற்றி வைத்து,
மூக்கின் மீது மூக்கு முட்டி,
கண்களால் முத்தமிட்டு அழகாய் கொஞ்சுவாய்!

இத்தனையையும் செய்துவிட்டு,
ஏதும் செய்யாததாய் சொல்லும்,
உன்னுடைய அன்பிற்கு,
நிகர் ஏதும் உண்டோ?
2

அழகிய ஓவியங்கள்!


நீரில் நனைந்த,
பழைய சோரும்...
உப்பில் ஊறிய,
எலுமிச்சை ஊறுகாயும்...
பகிர்ந்துண்டு மகிழ்ந்த,
அந்த நாளின்...
அனைத்து நிகழ்வுகளும்,
நினைவினில் வரைந்த,
அழகிய ஓவியங்கள்!
2

கலைஞன்


உதிரங்கள் உதிராது,
சிதைந்து போன சிற்பங்களை,
உடல் வருத்திச் செதுக்கியவன்,
கண் கொண்டு காணுகையில்,
கண்ணீர் பெருக்கு இல்லாமல்,
அவனது மனம் மட்டும்,
சுருங்கிச் சுருங்கி அழுகிறதாம்...

காகிதப் பேய்...


உன்னைச் சுற்றி,
கொட்டிக் கிடக்கும்,
எண் கொண்டு...
அச்சிட்ட காகிதங்களை,
சேகரித்தே வாழ்க்கையை,
இடுகாட்டில் தொலைக்கிறாய்...

பணம் என்னும்,
மாய வலையின்,
உடும்பு பிடியிலிருந்து,
நீங்க மறுக்கிறாய்...

இன்னும்,
எதை தேடி பயணிக்கிறாய்?

பணம் என்னும்,
அடைப்புக் குறியில் சிக்கி,
தனித்து நிற்கும் மனிதா...
வாழ்க்கையின் முற்று புள்ளியை,
அடையும் முன்னமே...
அன்பால் அழகாக மிளிரும்,
ஆச்சரியக் குறியை அடைந்து,
வாழ்க்கையை தெளிவான,
கவிதையாக மாற்று!

மழை இல்லாமல் நனைகிறேன்!


பேசும் மழலை மொழியையும்,
செய்யும் அழகான குறும்பையும்,
தத்தித் தவழும் நடையையும்,
கை தட்டி சிரிப்பதையும்,
புன்னகையோடு கண் சிமிட்டுவதையும்...
பார்த்து பார்த்து இரசித்து,
நீ பொழியும்,
உன்னுடைய அன்பால்...
மழை வரும் முன்னமே,
ஆனந்தமாய் நனைகிறேனே!
0

உன்னாலே... உன்னாலே...


விரல்களின் நுனியில்,
எண்ணற்ற வண்ணங்கள் வழிகிறது!
விழிகளின் வழியே,
ஒளிக் கீற்றுகள் தெரிக்கிறது!
செவிகளின் ஓரம்,
இசைச் சங்கமங்கள் நிகழ்கிறது!
கடலலை யாவும்,
கால்களை முத்தமிட்டு செல்கிறது!
இந்த மாற்றங்கள் எல்லாம்...
உன்னாலே நடக்கிறது!

அதிர்வு மொழி...


அன்போடு உதிர்க்கும்,
வார்த்தைகள் மட்டுமே,
காற்றை களைக்கும்,
அதிர்வு மொழியை,
முழுவதுமாய் கற்றிருக்கிறது!

மற்றவர்கள் உதிர்க்கும்,
அன்பில்லா வார்த்தைகள்,
காற்றில் கரைந்து,
ஒலி இழப்பதால்...
நீ இல்லாத,
ஒவ்வொரு நொடியும்,
மெளனம் மட்டுமே,
என்னை சூழ்கிறது!
2

பாசம் அறியாதவன்...


கோவிலுக்குச் செல்லும்,
ஒவ்வொரு முறையும்,
எனக்காக வேண்டுவதால்...
மூலவருக்கு கோபம்!
"நீ எத்தனை முறைதான்
வேண்டுவாய்?" என்று...

பாவம்...
படைத்தவன்,
ஈன்றவளின் பாசம் அறியவில்லை!
0

செல்லக் குறும்புகள்!


கன்னத்தை கிள்ளி,
கொட்டு வைத்து,
வசைப் பாடாமல்...
அழகாய் சிந்தும்,
உன்னுடைய சிரிப்புகளுக்காக...
தினமும் தொடர்கிறது,
என்னுடைய,
செல்லக் குறும்புகள்!
3

உறக்கமும் அழகு... அழகு...


இதமான தென்றலும்,
நறுமண வாடையும்,
கலந்த காற்றால் வரும்,
உறக்கத்தை காட்டிலும்...
தலை வருடி,
தட்டிக் கொடுத்து,
தாலாட்டு கேட்டு வரும்,
உறக்கம்...
எவ்வளவு அழகு!
2

எனக்கும் ஆனந்தமே!!!


வாங்கி வந்த இனிப்பை,
ஒரு கடி கடித்தவிட்டு,
மீதத்தை தரும் பொழுது...
உந்தன் முகத்தில் பொழியும்,
அமிழ்தை உண்ட ஆனந்தத்தை,
காணும் பொழுது,
எனக்கும் ஆனந்தமே!!!
2

இன்பத்திலும் பேரின்பம்!


பண்பட்ட நிலத்தை,
பயனுற விதைத்து,
நெடுக வளர்ந்து,
எட்டிப் பார்க்கும்,
நெல்மணிகளைக் காணுதல்,
விதைத்தவனுக்கு இன்பம்!

அதைப் போன்றே...
பண்பட்டு வளர்ந்த,
பிள்ளையை காண்பது,
ஈன்றவளுக்கு...
இன்பத்திலும் பேரின்பம்!
4

விண்ணப்பங்கள்!


உன்னருகே இல்லாமல்,
பயில்வதில் மூழ்கிய,
கல்லூரி நாட்களையும்...
வேலை தேடியே,
அலைந்த நாட்களையும்...
மீட்டுத்தர வேண்டியே,
ஒவ்வொரு கடவுளுக்கு...
ஆயிரம் விண்ணப்பங்கள்!
4

பயணம்


எந்தன் உறக்கத்தில்,
கனவுகள் இல்லை!
எந்தன் மனதில்,
குழப்பங்கள் இல்லை!
எந்தன் கண்களில்,
நீரும் இல்லை!
எந்தன் நினைவில்,
நீயும் இல்லை!
ஆனால்...
பிரிவின் வலி மட்டும்,
எங்கிருந்தோ வாட்டுகிறது.
ஆகவே...
உந்தன் மடி உறங்க,
கல்லூரி விடுமுறையை நோக்கியே,
இனி நாட்களின் பயணம்...
0

ஈரம்


காதல் நிரப்பிய,
மனதை கேட்டேன்!

எந்தன் கண்களுக்கு,
ஈரத்தை தந்துவிட்டு...
உந்தன் கண்களிலிருந்த,
காதலை எல்லாம்,
வேறொருவனுக்கு தந்துவிட்டாய்!
0

கண்ணாடி குமிழ்


கண்ணாடி குமிழாய்,
கொடுக்கப்பட்ட மனதை,
ஆயிரம் துண்டுகளாய்,
உடைத்த பின்பு...
நீ நடக்கும் பாதையில்,
உன்னை வருத்தாது,
ஒவ்வொரு துண்டும்,
உதிர்ந்த மலராய்,
மாறுவதும் ஏனோ?

முதல் காதல்!


கரை அறியா கனவுகளும்,
உன்னை எண்ணியே மலர்ந்தன!
கனவுகளில் வாழ்தலும்,
உன்னுடனே நடந்தன!
ஆயிரம் ஆசைகளும்,
ஆயிரம் முத்தங்களும்,
உனக்காகவே பிறந்தன!

என்னுடைய...
முதல் காதலின்,
உன்னுடைய மறுப்பால்,
இவை யாவும்,
வேறோடு மடிந்தன...
2

காற்றோடு...


என்னை பார்க்கவே வந்துவிடும்,
உன்னுடைய வாரக் கடிதத்தையும்...
என்னுடைய நலமறிய அனுப்பப்படும்,
உன்னுடைய அலைபேசி குரலையும்...
எதிர்பார்த்து காத்திருந்த,
ஒவ்வொரு அழகான நொடியும்...
கல்லூரி விடுதியின் அறையில்,
காற்றோடு இன்றும் கலந்திருக்கிறது...
அன்பின் நினைவலைகளாய்!

எத்தனை எத்தனை கோலங்கள்...


தாயின் கருவில் உயிராகவும்,
அழுது பிறந்த பிள்ளையாகவும்,
தத்தித் தவழும் மழலையாகவும்,
உடன் பிறப்பிற்கு சகோதரியாகவும்,
நட்பிற்கு உற்றத் தோழியாகவும்,
இல்லறம் புகும் மனைவியாகவும்,
மணவாளனை ஈன்றவளுக்கு மகளாகவும்,
பிள்ளைபேறு பெற்று தாயாகவும்,
எத்தனை... எத்தனை... கோலங்கள் காண்கிறாய்,
பெண்ணே!

கதைகள் கவிதைகளாய்!


கல்லூரி விடுதியில்,
என்னுடைய அறையில்,
நெடுநாட்களாக...
என்னை சுமந்த நாற்காலிகளும்,
சாய்ந்து நின்ற கதவுகளும்,
எந்தன் உறக்கம் காணாத தலையணையும்,
ஆயிரம் ஆயிரம் கதைகளாய்...
உந்தன் பிரிவின் வலியையும்,
உந்தன் அன்பின் இழப்பையும்,
கவிதையாய் சொல்லும்!
2

பிரிவின் வலி...


கல்லூரி விடுதியின்,
தாழிட்ட அறையில்...
பாலையில் எறியும்,
மனித உயிரின்,
பெருத்த வலியோடு,
ஒவ்வொரு நாளும்,
விடைபெறும் என்று...
உன்னை பிரியும்,
அன்றைய பொழுதில்,
நான் அறிந்திருக்கவில்லை!

அன்பைத் தேடி...


கல்லூரி விடுதியின்,
உணவுப் பட்டியலில்,
தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை...
உணவோடு பகிரப்படும்,
அம்மாவின் அன்பும் அக்கறையும்!
2

பெற்ற பலன்


பிறக்கும் குழந்தையின்,
உடலுக்கு உயிரையும்,
மனதிற்கு அன்பையும்,
நிரப்பித் தருகிறாய்!

சிறிது காலம்,
பிள்ளைக்கு உணவாக,
குருதியையும் தருகிறாய்!

நிரப்பித் தந்த,
அன்பை எல்லாம்,
உயிர்களிடம் வெளிப்படுத்தும்,
பண்பையும் தருகிறாய்!

ஒவ்வொரு நிலையிலும்,
ஒவ்வொரு செயலுக்கும்,
ஊன்றுகோலாய் இருந்து,
வாழ்க்கையில் வெற்றியையும்,
தேடித் தருகிறாய்!

பலன் ஏதும் வேண்டாது,
நீ செய்த செயல்களுக்கு,
நான்...
என்ன செய்ய போகிறேன்?
3

அறை எண் 9


வாடை காற்றால்,
அசையும் மரங்கள் கொண்ட,
கல்லூரி விடுதியில்,
சன்னலின் ஓரம்,
தனியாய் அமர்ந்து,
இரசிப்பதும்...
வருந்துவதும்...
ஏங்குவதும்...
உந்தன் அன்பை எண்ணியே!
3

பொம்மைகள்!


வானில் தெரியும் நிலவும்,
தெருவில் திரியும் நாயும்,
ஓரமாய் உறங்கும் பூனையும்,
தாடி வைத்த பூச்சாண்டியும்,
பக்கத்து வீட்டு பாப்பாவும்,
மின்னிக்கொண்டு போகும் வானூர்தியும்,
நான் உணவு உண்ண,
நீ காட்டும் பொம்மைகள்!

2

கொஞ்சலின் ஆனந்தம்!


நீ கொடுக்கும்,
முத்தங்களை எல்லாம்,
அன்பின் அடையாளமாய்,
தினம் தினம்,
மனதில் சேமிக்கிறேன்!

நீ என்னை,
கொஞ்சும் தருணத்தில்,
மொத்தமாய் தந்துவிடுகிறேன்!

ஆகையால்...
தாயாக நீயும்,
சேயாக நானும்,
கொஞ்சலின் ஆனந்தத்தை,
ஒன்றாக இரசிக்கிறோம்!
2

நன்றிகள்!


கண்ணீர் துடைக்கும் கைகளுக்கும்,
சாய்ந்து உறங்கும் தோள்களுக்கும்,
அன்போடு முத்தமிடும் இதழ்களுக்கும்,
நடை பழக்கிய விரல்களுக்கும்,
இத்தனை செய்தும்,
ஏதும் அறியாத பிள்ளையைப் போன்றே...
அமைதியாய் இருக்கும் உனக்கும்,
உன்னை தாயாய் தந்த இறைவனுக்கும்,
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளால் நன்றிகள்!
2

புண்ணியம்


நான் விளையாடும் பொழுது,
என்னுடன் நீயும் விளையாடுகிறாய்!
நான் சிரிக்கும் பொழுது,
என்னுடன் நீயும் சிரிக்கிறாய்!
நான் அழும் பொழுது மட்டும்,
என்னுடன் சேர்ந்து அழாமல்,
நீ ஏன் பதரிப்போகிறாய்?

உன்னை தாயாய் பெற்றதனால்,
புண்ணியம் கோடி கண்டேன்!
2

பட்டியல்


கரு முளைத்த கனமே,
கண்களுக்குள் ஆயிரம் கனவுகள்!
மனதிற்குள் ஓராயிரம் பெயர்கள்!
ஆண் பிள்ளைக்கும்,
பெண் பிள்ளைக்கும்,
தனித்தனியே பட்டியலிட்டு,
யோசித்துக் கொண்டிருக்கிறாய்!

பெண்ணே...
அன்பும் ஆசையும்,
கலக்கும் தருணம்,
இதுதானோ?

இணையேதும் இல்லை...


கைகளையும் கால்களையும்,
உதைத்துக் கொண்டே,
அழகாக சிரிக்கும்,
தவழுதலும் அறியாத,
சின்னஞ்சிறு பிள்ளையை,
கைகளில் ஏந்தி...
தோலோடு சாய்த்து...
தட்டிக் கொடுத்து,
தூங்க வைக்கும்...
தாயின் அன்பிற்கு,
இணையேதும் இல்லை!

பேரின்பம்...


கரு தரித்த பின்,
பத்து மாதங்கள் பொறுமையாய்,
கருவறையில் உருவம் தீட்டி,
உயிரும், உணவும் கொடுத்து,
பிள்ளைப் பேறு காண்பது,
தாய்க்கு இன்பத்திலும் பேரின்பமே...
0

தாலாட்டு...


கடலையில் குளியலிட்டு,
சாம்பிராணில் மேனி உளர்த்தி,
கருவேலம் மை கொண்டு,
நெற்றியிலும்... கன்னத்திலும்...
அழகாக பொட்டு வைத்து,
சேலையில் தொட்டி கட்டி,
இளம்பிள்ளையை உறங்க வைக்க,
தாலாட்டு நீ பாடுகையில்,
ஊரே உறங்கி போனதம்மா!

வருடல்


இரவின் குளிரோசையை உணர்த்தும்,
நதியின் நீரை திருடி...
நிலவின் சின்னத் துண்டுகளோடு,
பாலில் கரைத்த முல்தானி இட்டு...
கரைத்த மிருதுவான கலவையை,
மயிற் பீலி கொண்டு,
முகம் வருடுதல் போன்றே...
பிள்ளையில் கரங்களைக் கொண்டு,
அன்னை தன் முகம் வருடுதலும்,
மென்மையாம்!

பிள்ளைபேறு!


குழந்தையின்...
பிறை சிரிப்பும்,
வெட்டப்படாத கன்னக் குழியும்,
கலங்கப்படாத கண்களும்,
பிஞ்சுக் கால்களும்,
கூழாங்கல் மேனியும்,
பிதற்றல் மொழி பேசும் இதழும்,
எப்பொழுதும் ஈர்ப்பதால்...
உறக்கம் மறந்து இருக்கிறாள்,
பிள்ளைபேறு பெற்றவள்!

அம்மா!!!


மெளனம் என்னும் தவம் களைத்து,
அழகாய் ஆனந்தமாய் ஈன்றவளை நோக்கி,
உரைந்த உயிரையும் உருக வைக்கும்...
ஆதியில் தோன்றிய மழலை உதிர்க்கும்...
"அம்மா" என்னும் உயர் வார்த்தைக்கு,
கோடி கோடியாய் குவிந்திருக்கும்,
ஆயிரம் அர்த்தமுள்ள வார்த்தைகளும்,
நிகர் செய்ய ஈடு பெறுமோ?

எத்தனை தவம் செய்தாய்?


இதழ் விரியா மலர் போல,
விரல்கள் குவிந்த இரு கைகளையும்...
மெளனமும் மொழியும் அரியா,
அழு குரல் அறிவிப்பையும்...
எங்கும் காணா அழகை குவித்த,
களங்கம் இல்லா முகத்தையும்...
விரிந்த மலருக்குள்,
மொட்டாய் முளைத்திருக்கும்,
விழி இரண்டினையும்...
மண்ணோடு கவி பாடாத,
மலர் போன்ற பாதங்களையும்...
முதல் காட்சியாய் காண,
எத்தனை தவம் செய்தாய்?