ஆழிக்கரை பருமணலின்,
உட்புகும் அலை நீரே...
அங்கேயே சில நேரம்,
நகராது வாசம் செய்தால்...
என்னவளின்...
பாதச் சுவடுகளின்,
அழகியல் அரங்கேற்றம்,
அங்கேயே நிலைபெறும்!
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
உட்புகும் அலை நீரே...
அங்கேயே சில நேரம்,
நகராது வாசம் செய்தால்...
என்னவளின்...
பாதச் சுவடுகளின்,
அழகியல் அரங்கேற்றம்,
அங்கேயே நிலைபெறும்!
காதுகள் அறியும்,
மொழியன்றி...
கண்களும் அறியும்,
மொழியதனில்...
கைகளே கவிபாடும்,
கவித்துவத்தை...
கதைப்போமா...
கதைப்போமா...
ஆண்:
நான் பிழை...
உன் மெய் எனும்,
உண்மையில் சிறு பிழை...
நீ மழலை...
என் மீது விரலால்,
தவழும் மழலை...
பெண்:
வார்த்தை மழையினில்,
எனை நனைத்தது போதும்...
இவை என் விழியினில்,
முத்தங்கள் பதித்து,
வரைந்த கவிதைகள் போலும்...
ஆண்:
அழகியே...
நீயே என் கவிதை...
வார்த்தைகள் அதற்கு தேவையில்லை...
நான் உதிர்பதெல்லாம்,
உன்னிடமிருந்து பறித்த மிச்சங்களை...
பெண்:
என்னை மொத்தமாய்,
களவு கொண்ட கள்வா...
மீதமிருக்கும் அனைத்து அன்பையும்,
களவு கொள்ள வருவாய்...
ஆண்:
நான் பிழை...
உன் மெய் எனும்,
உண்மையில் சிறு பிழை...
நீ மழலை...
என் மீது விரலால்,
தவழும் மழலை...