கவிக்குடில் குமரன்

~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~

பம்பரம்/Top


கயிற்றைக் கொண்டு,
சுழற்றி விடப்பட்ட,
ஒற்றை கால்,
பம்பரத்தை போன்றே...
என் மனதும்,
உன் நினைவுகளால்,
சுழற்றி விடப்பட்டு,
நொடி பொழுதும் நிற்காமல்,
உழன்று கொண்டே இருக்கிறது!

Like a whip,
that makes a top,
to swirl...

The thoughts about you,
makes my heart,
to swirl,
without any pause.

நண்பன்


வைகறையில்...
இளங்காந்தற் கதிரவனைக் கண்டு,
நீராய் உருகும் பனித்துளியே...
உன்னைப் போன்றே,
உருகி வழிய,
ஒவ்வொரு உயிருக்கும்...
புன்னகை பூவோடு,
நட்பை பகிரும்,
தோழமை வேண்டும்!

நிலவே முகம் காட்டு


அழகிய வெள்ளி நிலவை,
இதுவரை பார்த்ததே இல்லையாம்...
எனவே உன் முகத்தை,
எட்டி எட்டிப் பார்க்கிறது...
உன் கூந்தலில்,
ஒட்டிக் கொண்டிருக்கும்,
வெண்ணிற மல்லிகைகள்.

வார்த்தைகள் இல்லா கவிதை...


இரு வரிகள்...
அதில் வார்த்தைகள்,
எதுவும் இல்லை...
ஆனாலும் கவிதை!

உன் விழியில் வரைந்த,
கண்மை வரிகள்...

சிறுபிள்ளையாய் செய்வாயா?


இறைவா...
தாயின்...
அன்பான முத்தமும்,
ஆராரிரோ தாலாட்டும்,
அழகிய கொஞ்சலும்,
பாசமிகு அரவணைப்பும்,
அவள் மடி உறக்கமும்,
மீண்டும் பெற...
சிறுபிள்ளையாய் செய்வாயா?

தேடல்

Loading...

கவிதைகள்

நண்பர்கள்

பிளாகர்ஸ்.காம்

வினோத்குமார் கோபால் - on Bloggers.com

இன்ட்லி