உன்னைப் பற்றி
நான் என்ன சொல்ல...
உயிரை உரித்து
உதிரத்தை உணவாய்
உறிஞ்சும்
உன் பார்வை
இது நாள் வரை
நாம் பேசாத
வார்த்தைகளெல்லாம்
சேர்த்துப் பேசும்
உன் மெளனம்
இது வரை காணாத
திரை மறைவுச்
சித்திரமாய்
என் உருவம் காட்டும்
கருவண்டாய் போன
உன் விழிகள்
நம் நினைவுகள் அனைத்தும்
ஒருங்கே உயர்த்தி
நிழற் படம் காட்டும்
உன் புருவங்கள்
நாம் இருவரும்
ஒன்றெனக் காட்டும்
என் உயிரை விதைத்து
உதித்த குளிர் நிலவு
உன் நுதற் பொட்டு
சொல்வதற்கு வார்த்தைகள்
சிக்கவில்லை
பீலி
கருமேகம் கண்டவுடனே
பீலியை படரவிடும்
மயில் பெண்ணே!
நீ யுதிரர்த்த ஒற்றைப் பீலி
அம்பாய் மாறி
மனதில் சொருகுதல்
முறையோ?
பீலியை படரவிடும்
மயில் பெண்ணே!
நீ யுதிரர்த்த ஒற்றைப் பீலி
அம்பாய் மாறி
மனதில் சொருகுதல்
முறையோ?
நிலாப் பெண்
புவி ஈர்ப்பை
உதரிவிட்டு
நிலவீர்ப்பை
கையகப்படுத்த
நீர்க் கூட்டம்
அலைகளாய்
பொது குழு கூட்டும்
அன்பே நீ நிலவானால்!
குளிர் கொண்ட
நீர்களனைத்தும்
காணாமற் போனதே
பெண்ணே நீ என்னவானாய்!
உதரிவிட்டு
நிலவீர்ப்பை
கையகப்படுத்த
நீர்க் கூட்டம்
அலைகளாய்
பொது குழு கூட்டும்
அன்பே நீ நிலவானால்!
குளிர் கொண்ட
நீர்களனைத்தும்
காணாமற் போனதே
பெண்ணே நீ என்னவானாய்!
முதல் முத்தம்
அந்த நிமிடம்
உணர்ச்சிகளின் உச்சம்
நரம்புகள் அனைத்தும்
இருகிப் போகும்
செங்காந்தல் மலரின்
நிறம் கொண்ட
ஓய்வில்லா செந்நீரும்
உறங்கிப் போகும்
உயிரை சில நேரம்
உடலே உமிழ்ந்துவிடும்
காரணம்?
நீ கொடுத்த
முதல் முத்தம்
உணர்ச்சிகளின் உச்சம்
நரம்புகள் அனைத்தும்
இருகிப் போகும்
செங்காந்தல் மலரின்
நிறம் கொண்ட
ஓய்வில்லா செந்நீரும்
உறங்கிப் போகும்
உயிரை சில நேரம்
உடலே உமிழ்ந்துவிடும்
காரணம்?
நீ கொடுத்த
முதல் முத்தம்
ஒற்றை மரம்
கருங்காடு ஈன்றெடுத்த
ஒற்றைக் கால் பிள்ளையே
உன்னோடு உறவாட
ஒருவன் மட்டும் வருவானே!
வெறுமையும் உருமாறி
இசையாகிப் போவானே
காற்றென்னும் அவனே
உந்தன் காதலனே
ஒற்றைக் கால் சிலையே
நான் உன்னில்
முதிர்ந்த இலையே...
ஒற்றைக் கால் பிள்ளையே
உன்னோடு உறவாட
ஒருவன் மட்டும் வருவானே!
வெறுமையும் உருமாறி
இசையாகிப் போவானே
காற்றென்னும் அவனே
உந்தன் காதலனே
ஒற்றைக் கால் சிலையே
நான் உன்னில்
முதிர்ந்த இலையே...
எனக்கு மட்டும் தான்
இறப்பு என்பது
எனக்கு மட்டும் தான்
என் மனதோடு வாழும்
உனக்கு அல்ல
ஏனெனில்
என் மனமொரு
தாயின் கருவறை...
காலன் வந்து
என்னுயிர் கொண்டு
சென்றாலும்
பிறவா மழலையாய்
நீ எந்தன்
மனதில் என்றும்
உயிர் பெற்றிருப்பாய்...
எனக்கு மட்டும் தான்
என் மனதோடு வாழும்
உனக்கு அல்ல
ஏனெனில்
என் மனமொரு
தாயின் கருவறை...
காலன் வந்து
என்னுயிர் கொண்டு
சென்றாலும்
பிறவா மழலையாய்
நீ எந்தன்
மனதில் என்றும்
உயிர் பெற்றிருப்பாய்...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)