அழகியலின் விதி மீறல்
வர்ணனை கொடுக்க...
நிலவை அழைத்தேன்,
நீரை அழைத்தேன்...
மானை அழைத்தேன்,
மீனை அழைத்தேன்…
தேனை அழைத்தேன்,
தேவதைகளை அழைத்தேன்…
அவள்…
எந்த உவமைக்குள்ளும்,
அடங்கவில்லை!
அவளை…
எவற்றிற்கும் ஒப்புமையாக்க,
என் மனம் ஒப்பவில்லை!
ஏனெனில்,
அவள் அழகியலின்,
விதி மீறல்!
கதைப்போமா
காதுகள் அறியும்,
மொழியன்றி...
கண்களும் அறியும்,
மொழியதனில்...
கைகளே கவிபாடும்,
கவித்துவத்தை...
கதைப்போமா...
கதைப்போமா...
நான் பிழை...
ஆண்:
நான் பிழை...
உன் மெய் எனும்,
உண்மையில் சிறு பிழை...
நீ மழலை...
என் மீது விரலால்,
தவழும் மழலை...
பெண்:
வார்த்தை மழையினில்,
எனை நனைத்தது போதும்...
இவை என் விழியினில்,
முத்தங்கள் பதித்து,
வரைந்த கவிதைகள் போலும்...
ஆண்:
அழகியே...
நீயே என் கவிதை...
வார்த்தைகள் அதற்கு தேவையில்லை...
நான் உதிர்பதெல்லாம்,
உன்னிடமிருந்து பறித்த மிச்சங்களை...
பெண்:
என்னை மொத்தமாய்,
களவு கொண்ட கள்வா...
மீதமிருக்கும் அனைத்து அன்பையும்,
களவு கொள்ள வருவாய்...
ஆண்:
நான் பிழை...
உன் மெய் எனும்,
உண்மையில் சிறு பிழை...
நீ மழலை...
என் மீது விரலால்,
தவழும் மழலை...
இனிதான் இனிதாய்...
இனிதான் இனிதாய்...
இரவினில் இதழ்கள் இசைப்பதும் இனிதாய்!
இனிதான் இனிதாய்...
இமையில் இமை இமைப்பதும் இனிதாய்!
இசைந்து இசைந்து இல்லில்,
இறையென இருந்தோம்...
இடரிலும் இன்னலிலும் இருவரும்,
இணைந்தே இருப்போம்....
இறவா இரவினில்,
இச்சையின் இசைவினில்...
இழக்கயேதும்,
இல்லாது இருப்போம்...
(இனிதான் இனிதாய்)
இறுக்கிய இடையினில்,
இறுகிய இதயமும்,
இறகாய் இடருதே...
இவன் இருப்பது,
இவள் இடையில்...
இவள் இயங்குவது,
இவன் இசைவில்...
(இனிதான் இனிதாய்)
இருவரும் இரையாவது,
இச்சையெனும் இறையால்,
இனிதான் இனிதாய்!
இனிதான் இனிதாய்!
கண்ணாடியும் கரையுதே!
கண்ணாடியும் தண்ணீராய்,
கரைந்தே போகிறது...
உன்னுடைய அழகிய முகத்தை,
அதனிடத்தில் காட்டும் பொழுது...
அவ்வாறு...
கரைந்தோடிய நீரெல்லாம்,
உரைந்தே போகிறது...
உன்னுடைய அழகிய அன்பை,
என்னுடன் பகிரும் பொழுது!
கரைந்தே போகிறது...
உன்னுடைய அழகிய முகத்தை,
அதனிடத்தில் காட்டும் பொழுது...
அவ்வாறு...
கரைந்தோடிய நீரெல்லாம்,
உரைந்தே போகிறது...
உன்னுடைய அழகிய அன்பை,
என்னுடன் பகிரும் பொழுது!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







